எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற விசேட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு வெளிநாட்டு உழைக்கும் சமூகத்தின் சார்பில் 2024 ஆம் ஆண்டு தொழில்முனைவோர் ஆண்டாக பெயரிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுடனும் அமைச்சர் சிநேகபூர்வ சந்திப்பிலும் ஈடுபட்டார்.
கடந்த ஆண்டில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு வெளிநாட்டு ஊழியர்கள் அதிக பங்களிப்பை வழங்கியதையும் அமைச்சர் நினைவுபடுத்தினார். கடந்த வருடத்தில் எடுக்கப்பட்ட துணிச்சலான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாக மக்கள் எதிர்கொண்ட பல துன்பங்களுக்கு முடிவு கட்ட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் திரு. ஆர்.பி.ஏ.விமலவீர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி, பொது முகாமையாளர் டி.டி.பி.சேனாநாயக்க மற்றும் பணியக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.