திறனுள்ள மனிதவளம்
உலகெங்கிலும் உள்ள பல முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களுக்கு அவர்கள் எதிர்க் கொள்ளும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் நல்ல பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினம். அதே நேரத்தில் திறமையான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது மேலும் கடினமான செயலாகும்.
vவ்வாறாயினும் பல வருடங்களாக பல தொழில்களுக்கு பயிற்சியளிக்ககூடிய,நம்பகமான,விஸ்வாசமான மற்றும் செலவு குறைந்த மனித வளத்தின் பிரதான ஆதாரமாக இலங்கை ஒரு வலுவான நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளுடன் வர்த்தகத்தின் தாராளமயமாக்கல் தொழிற்துறை திறன்களை கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் இளைஞர்களை பெரிதும் ஊக்குவிக்கிறது.தொழிற்துறை போக்குகளை தீவிரமாக கண்காணித்தல் மற்றும் நவீன தொழிநுட்பம் மற்றும் பயிற்சிகளின் கீழ் இலங்கை பணியாளர்கள் தங்கள் வழியில் வரக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்க்கொள்ளத் தயாராக இருப்பதை உறுதி செய்துள்ளது.இந்தப் பயிற்சித் திட்டங்கள் வருங்கால புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்மறையான பணி மனப்பான்மை மற்றும் நடத்தை முறைகளை உருவாக்க உதவுகின்றன.கூடுதலாக பயிற்சி பெற்றவர்கள் வேலை அனுபவத்தைப் பெறுவதற்கும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்குத் தேவையான உயர்தரங்களை பெறுவதற்கும் பெரிய தொழில்களில் பணிபுரிய பயிற்சி பெறுகிறார்கள்.
இலங்கையில் இருந்து கிடைக்கும் மனிதவளம், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், கட்டிடகலைஞர்கள், மருத்துவர்கள்,ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், வங்கி சேவையாளர்கள், ஹோட்டல் மற்றும் உணவகப்பணியாளர்கள், வரவேற்பாளர்கள்,தாதிகள், மருத்துவ உதவியாளர்கள், கணினி இயக்குனர்கள்,Programmers and System Analysts.
ஏனைய தரங்களில் இயந்திர இயக்குனர்கள்இ தொழிற்சாலை பணியாளர்கள்,Welders, Fitters, மோட்டார் சீர்திருத்துவர்கள்,கனரக வாகன சாரதிகள் , துறைமுகசார் தொழிலாளர்கள், தொலைதொடர்பு தொழிநுட்பவியலாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப்பணியாளர்கள்
Follow us on